14 வயதான காதலியை பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற காதலனுக்கு நேர்ந்த கதி!

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியை ஒரு வருடமாக காதலித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற காதலனை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார்.

மூன்றாம் வட்டாரம், கும்புறுப்பிட்டி, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 25வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.

சந்தேக நபர் பதினான்கு வயதுடைய சிறுமியை ஒரு வருடமாக காதலித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் சிறுமியை நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையிலே சிறுமியின் பெற்றோர் சந்தேக நபர் தொடர்பாக குச்சவெளி காவல் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குச்சவெளி காவல் துறையினர் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.