இலங்கையில் தொடர்ந்து மின்தடை! கடும் கோபத்தில் மகிந்த

இலங்கையில் இந்த நாட்களில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்படுத்தப்படுகின்றமை குறித்து எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது கூட அந்த பிரதேசங்களுக்கு எமது அரசாங்கத்தல் மின்சாரம் வழங்கப்பட்டது.ஆனால் இன்றைய நிலைமையில் இந்த அரசாங்கத்திற்கு இதைக் கூட முறையாகச் செய்ய முடியவில்லை.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை அமைத்தபோது கடுமையாக விமர்சித்தனர். அந்த அனல்மின் நிலையம் தற்போது இல்லை என்றால் நாடு இருளடைந்திருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.