வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான இலங்கை மாணவன்!

ஜப்பானில் கல்வி கற்று வந்த இலங்கை மாணவரொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவர் செலுத்திய மகிழூர்தி எதிரில் வந்த கொள்கலன் பாரவூர்தியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கம்பஹா – கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த இசுரு அபேதீர என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஜப்பான் Utsunomiya orion பாடசாலையில் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.