ஜப்பானில் கல்வி கற்று வந்த இலங்கை மாணவரொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மாணவர் செலுத்திய மகிழூர்தி எதிரில் வந்த கொள்கலன் பாரவூர்தியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கம்பஹா – கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த இசுரு அபேதீர என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் ஜப்பான் Utsunomiya orion பாடசாலையில் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.