வெளியாகியது க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள்; இன்றைய நிலையை அன்றே கூறிய தமிழீழ தேசிய தலைவர்?

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில்.தமிழீழத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றியவர்களில் 70 வீதத்திற்கு குறைவானவர்களே க.போத.உயர்தரத்திற்கு தெரிவாகியிருக்கும் துர்பாக்கிய நிலை உருவாகி இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

தமிழீழ நிழலரசின் கீழும் போர்க்காலத்திலும் தமிழீழ ம் கல்வியில் இலங்கையின் ஏனைய மாவட்டங்களை விட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

திட்டமிட்ட வகையைில் மாணவர்கள் மீது திணிக்கப்படும் போதைப்பொருள் போன்ற தேவையற்ற விடயங்களே இந்த வீழ்ச்சிக்கு காரணமாக இருக்ககூடும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

”எமது இனத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் கல்வி ஆதாரமானது,எமது சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் அடித்தளமானது.நீண்ட காலமாகவே,எமது கல்வி வாழ்வைச் சிதைத்துவிட எதிரியானவன் முனைந்து வருகிறான் இதனால்தமிழரின் கல்வி பாரதூரமான அனவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது”

தமிழீழ தேசிய தலைவர்