யாழில் இன்று அதிகாலை கோர விபத்து! மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

சாலை வளைவில் திரும்பிய கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்துடன் மோதியது.

இந்த விபத்து இன்று அதிகாலை யாழ்ப்பாணம் சாவகச்சேரி அஞ்சலகச் சந்தியில் இடம்பெறுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த காரே விபத்துக்குள்ளானது. அதிஷ்டவசமாக காரில் வந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக குடாநாட்டில் இவ்வாறான தேவையற்ற விபத்துச் சம்பவங்கள் சடுதியாக அதிகரித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.