யாழில் தற்கொலைக்கு முயன்ற சந்தேக நபர்! பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பிளேட்டால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் வீடொன்றுக்குள் புகுந்து தீ வைத்தனர் – அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் நேற்று(வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவர் பிளேட்டால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சந்தேக நபரை கைது செய்து அவரது உடமையிலுள்ள பொருட்கள் குறித்து சோதனை செய்து கைப்பற்றாமல் அவரை தடுப்பில் வைத்திருந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர் விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.