திருமணமாகவிருந்த பெண்…! அரைநிர்வாண கோலத்தில், வீதியில் வீசப்பட்டிருந்த மாணவி

இந்தியா, திண்டுக்கல் மாவட்டம் ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி இவர் கோவை ஆவாரம்பாளையம் வீதியிலுள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் கல்லூரி விடுதியிலேயே தங்கி தனது படிப்பை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் மாயமாகியுள்ளார். மாணவியின் கையடக்கத்தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், மாணவியின் பெற்றோரும், கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவியை தேடியுள்ளனர்.

ஆனால் மாணவி தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கோவை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து, காட்டூர் பொலிஸார் மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் வீதியோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 4 மணிக்கு அரை நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து கோமங்கலம் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

அங்கு சடலமாக கிடந்தவர், பிரகதி என்று உறுதி செய்துள்ளனர். அங்கு அரை நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்த, பிரகதிiய பார்த்த உறவினர்கள், கதறிதுடித்துள்ளனர். மாணவியை மர்ம ஆசாமிகள் காரில் கடத்திச்சென்று கொலை செய்து இருக்கலாம் என்று பொலிஸார சந்தேகிக்கிறார்கள்.

இந்நிலையில், மாணவி பிரகதி உறவினர் நாட்டுதுரை என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆகவே அவர்களுக்கு திருமணம் செய்ய, கடந்த 2 மாதங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் 13ஆம் திகதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில் மாணவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் அவருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை நாட்டுத்துரை ஆகியோர் கதறி அழுதனர். பிரகதி கழுத்தில் கிடந்த நகை, காதில் இருந்த கம்மல் ஆகியவை திருடுபோகவில்லை. இதன் காரணமாக இந்த கொலை நகைக்காக நடக்கவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

அவரது கழுத்து அறுக்கப்பட்டு, ஆடைகள் கலைந்த நிலையில் கிடந்து உள்ளார். எனவே அவரை மர்ம ஆசாமிகள் கல்லூரியில் இருந்து வெளியே வந்த போது காரில் கடத்தி சென்று, கொன்று உடலை பூசாரிபட்டியில் வீசி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவை பொலிஸார் ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் காரில் மாணவியை கடத்தி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் கல்லூரி மாணவி பிரகதியை ஒரு தலையாக காதலித்து வந்த 2 பேர் தான் இந்த படுகொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டி பாலியல்பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி மாணவி கடத்திச்செல்லப்பட்டு பொள்ளாச்சி பகுதியில் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.