மஹிந்தவிற்கு எதிரான வழக்கு 26 ஆம் திகதி விசாரணை..!

மஹிந்தவிற்கு எதிரான வழக்கு 26 ஆம் திகதி விசாரணை..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் நடவடிக்கைகளுக்காக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான வாகனங்களுக்கு செலுத்தவேண்டிய 142 மில்லியன் ரூபா நிதியை வழங்காமை தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், மஹிந்தராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு உறுப்பினர்கள் தமது ஆட்சேபனையை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக, தமது ஆட்சேபனையை வௌியிட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இறுதி வாய்ப்பை வழங்கவே நீதிமன்றம் எதிர்வரும் 26 ஆம் திகதி, விசாரணையை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.