நாளை முதல் மூன்று நாட்களுக்கு கடும் வெயில்

நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நாட்டின் சில பாகங்களில் வெப்பமான வானிலை நிலவக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய, நாளைய தினம் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும்.

குறித்த பகுதிகளில் பணிகளில் ஈடுபடுபவர்கள், அதிகளவு நீரை அருந்த வேண்டும் என்றும், தங்களது பணியிடங்களில் தேவையான அளவு ஓய்வாக இருக்க வேண்டும் என்றும் காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேநேரம், முதியோர்கள் மற்றும் நோய்த்தாக்கம் உள்ளவர்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

அத்துடன், குழந்தைகளையும், சிறுவர்களையும் வாகனங்களில் தனியாக விட்டுச் செல்லக்கூடாது என்றும் அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, அதிக பணிச்சுமையை தவிர்க்குதாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.