இலங்கையில் மீண்டும் தடைப்பட்டுள்ள மின்சார விநியோகம்

இலங்கையின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

புதிய லக்ஷ்பான பலங்கொடை வீதியில் மின்னல் தாக்கியமையினால் ஹம்பாந்தோட்டை, எம்பிலிப்பிட்டிய தெனியாய உட்பட பிரதேசத்தில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

தடைப்பட்ட மின்சார துண்டிப்பை மீளவும் சீர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.