தலைவலி மேல் தலைவலி ஷங்கருக்கு, பாவம் தாங்க!

ஷங்கர் இவர் படங்களுக்கு என்று தன் ப்ராண்ட் ஒன்று உள்ளது. இந்தியா முழுவதுமே ஷங்கர் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் இவர் தற்போது இந்திரன் இரண்டாம் பாகத்தில் பிஸியாகவுள்ளார், ஆனால், இப்படம் அவருக்கு கொஞ்சம் தலைவலியாக அமைந்து வருகின்றது.

ஏனெனில் கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதால் அவரால் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியவில்லை.

படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருக்க லைகா நிறுவனம் இதிலிருந்து விலகுவதாகவும், இதற்கு பதிலாக ரிலேன்ஸ் உள்ளே வருவதாகவும் ஒரு பத்திரிகையாளர் அவர் தளத்தில் தெரிவித்துள்ளார்.