காதலியின் மூக்கை கடித்து துப்பிய இளைஞன்…வெளியான வினோத சம்பவம்

ராஜஸ்தானில் காதலி தன்னுடன் பேசாததால் ஆத்திரமடைந்த இளைஞர், அவரது மூக்கை கடித்த வினோத சம்பவம் நடந்துள்ளது.

உதைப்பூர் மாவட்டம் கேர்வாடா பகுதியை சேர்ந்த மஞ்சு பர்மர், அப்பகுதியை சேர்ந்த இளைஞர் கேசவ்லால் என்பவரை காதலித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சந்த்கேடாவில் வசிக்கும் சகோதரி வீட்டுக்கு சென்ற மஞ்சு, அங்கேயே தங்கியபடி கூலித்தொழில் செய்து வந்துள்ளார்.

கேசவ்லாலுடனான தொடர்பையும் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் தனது நண்பன் மூலம் மஞ்சு, சந்த்கேடாவில் இருப்பதை அறிந்த கேசவ் லால், கடந்த 8ம் தேதி அங்கு சென்றுள்ளார்.ஆனால் தன்னுடன் மஞ்சு பேச மறுக்கவே, ஆத்திரமடைந்த கேசவ்லால் அவரது மூக்கை கடித்துள்ளார். படுகாயமடைந்த மஞ்சு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.