சிற்றூர்ந்து சாரதியின் கவனமின்மையால் நேர்ந்த பயங்கர விபத்து! சிசிடிவி காணொளி

பதுளை கொழும்பு பிரதான வீதியின் ஹாலிஎல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தொன்றில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்றின் மீது சிற்றூர்தியொன்று மோதியதில் இந்த விபத்து இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் ஹாலிஎல காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை , இந்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.