யாழில் மது போதையில் பொலிஸ் அதிகாரி செய்த காரியம்!

மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலிப் பொலிஸார் வீதியில் வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களுடனும் பொலிஸார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வைத்தியசாலை வட்டாரத்தால் தெரிவிக்கப்பட்டது.

சுன்னாகம் பகுதிநோக்கி உந்துருளியில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் உந்துருளியைச் செலுத்திச் சென்றதோடு வீதியில் பயணித்த பெண் ஆசிரியர் ஒருவரையும் மோதித்தள்ளினர்.

இதன்போது வீழ்ந்த இரு பொலிசாரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சமயம் இருவரும் போதையின் உச்சத்தில் வைத்தியசாலையில் இருந்த அலுவலர்களுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு பணிபுரியும் சிங்களமொழி தாதியர்கள் உதவ முற்பட்டபோதும் அவர்களையும் தகாத வார்த்தைகளால் ஏசியதால் குறித்த தாதியர்களும் ஒதுங்கிக் கொண்டனர்.

இந்த விடயம் வைத்தியசாலையின் பணிப்பாளரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.