ஆசன முன்பதிவு செய்தும் பயணிகளை ஏற்றாது சென்றுள்ள அரச பேருந்து!

யாழிலிருந்து பொத்துவில் நோக்கி பயணிக்கும் பொத்துவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் ஆசன முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றாது பேருந்து சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரவு 8.30 மணியளவில் யாழிலிருந்து பொத்துவில் நோக்கி பயணிக்கும் online மூலம் ஆசன முன்பதிவு செய்யும் இல NB 9929 எனும் குறித்த பேருந்தினை பூவங்குளம் பகுதியிலிருந்து பயணிகள் இடை நிறுத்தியும் பயணிகளை ஏற்றாது சென்றுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பயணிகள் கொழும்பு நோக்கி பயணிக்கும் வேறு பேருந்தின் மூலம் குறித்த பேருந்தினை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்ட போதிலும் பயணிகளின் இவ்வாறான பிரச்சினைகளுக்கு நடத்துனர் தகுந்த முறையில் பதிலளிக்காது அசமந்தபோக்கில் நடந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.