அதிஷ்டமாக கிடைத்த 35 இலட்சம் ரூபா! நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பெருந்தொகை பணம் எவ்வாறு கிடைத்தது என்பதை தெளிவுபடுத்த தவறிய இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் 35 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்துடன்கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்த நிலையில் பெருந்தொகை பணம் இவர்கள் வசமிருந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைக்கமைய அவர்களுக்கு பணம் எப்படி கிடைத்ததென அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை.

அதற்கமைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.