தலைகீழாக ஏற்றப்பட்ட கொடி!! பதறிய மாவை

வவுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தேசிய மட்ட இளைஞரணி நிர்வாகத் தெரிவு இன்று இடம்பெற்றபோது தமிழரசுக்கட்சியின் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டமையினால் சிறு குழப்பம் ஏற்பட்டது.

இளைஞரணி நிர்வாகத் தெரிவு இடம்பெறுவதற்கு முன்னர் கட்சியின் கொடி ஏற்றுவதற்காக அனைவரும் நிகழ்வு இடம்பெற்ற வவுனியா நகரசபையின் மண்டபத்திற்கு முன்பாக கூடியிருந்த நிலையில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவால் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

ஏற்றப்பட்ட சில நொடிகளில் கட்சியின் கொடி தலைகீழாக காணப்பட்டமை மாவை சேனாதிராஜாவால் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் கொடி இறக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அவ்விடத்திற்கு வந்து கொடியை சீர் செய்து கொடுத்திருந்த நிலையில் மீண்டும் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.