பிரபாகரனே உண்மையான தலைமைத்துவ பண்பை கொண்டவர்!

தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் அல்ல. அதற்கு அப்போதைய அரசியல் தலைமைகளே காரணமென குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி.

கிளிநொச்சியில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நான் கண்ட தலைமைத்துவ பண்பு கொண்டவர்களில் பிரபாகரன் நல்லெதொரு தலைமைத்துவ பண்பு கொண்டவர். கீழ் உள்ளவர்கள் செய்த தவறுகள் அத்தனையையும்தான் மேல் போட்டுக் கொண்டு, அத்தனை தவறுகளையும் தானே ஏற்றுக்கொண்டார்.

ஆனால் இப்போதைய தமிழ் தலைமைகள் தமது பிழைகளையும் பிறர் மீது சுமத்திவிட்டு தப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் சிறந்த தலைமைத்துவ பண்பை பிரபாகரன் கொண்டுள்ளார். தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் காரணமானவர் அல்ல. அன்றிருந்த அரசியல் தலைவர்களும் முழுக்க முழுக்க காரணம்“ என தெரிவித்துள்ளார்.