தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது.
பொதுவாக காலைவேலையில் அனைத்து நடிகர், நடிகைகளும் வாக்களித்தனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காலை சென்று வாக்களித்தார். அஜித்தை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் கோஷமிட்டுள்ளனர்.
இதனால் அங்கிருந்த காவலாளர்கள் அஜித்தை வரிசையில் நிற்க வைக்காமல் வாக்கு சாவடிக்கு அனுப்பியுள்ளனர்.
இதனை கண்ட அங்கிருந்த சில பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஓட்டளிக்க சென்றவர்களில் யாரோ அஜித்தின் தலையில் தாக்கியதாகவும் கூறப்படுகின்றது. இதனால் அஜீத்தின் தீவிர ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
This is atrocious that celebrities being harassed in public.. Few days back it was @khushsundar mam in public meeting and now it is Ajith sir being physically harassed by strangers.
Even celebrities are humans and need their space.. Spread love and not Hate! pic.twitter.com/dsuXZGazWk
— Mithun K Raman (@mithunraman) April 20, 2019