குண்டு வெடிப்புக்களில் 25 பேர் பலி – 160 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 160 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 160 பேரளவில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மருத்துவமனைத் தகவல்கள் எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்தன.

இதேவேளை, கட்டான மற்றும் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயங்களிலும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் எமது செய்தித் தொடர்பாளரகள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், கொழும்பு – சங்ரிலா , கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிரான்ட் விருந்தகங்களின் வளாகங்களிலும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.