கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உட்பட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளைவத்தை, தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள தேவாலயங்களில் பெருமளவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு திருப்பலி பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை நிறுத்தியுள்ள பொலிஸார் பக்தர்களை வீடுகளுக்கு செல்லுமாறு பணித்துள்ளனர்.
இதன் காரணமாக தெஹிவளை பகுதியில் பாரிய நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. பதற்றமடைந்துள்ள மக்கள் வீடுகளை நோக்கி விரைந்து வருவதாக தெரிய வருகிறது.