விடுமுறையில் உள்ள மருத்துவ நிபுணர்களை உடன் கடமைக்கு திரும்ப அழைப்பு!

இன்றையதினம் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்ப தற்காக விடுமுறையில் உள்ள விசேட மைருத்துவ நிபுணர்கள்,தாதியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை உடனடியாக கடமைக்கு திரும்புமாறு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

இன்றையதினம் மூன்று தேவாலயங்களிலும்,மூன்று ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்புகள் இடம்பெற்று ள்ளன.இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் 400 இக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.