விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடக்கவில்லை!

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின் போதுகூட ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொட்டாஞ்சேனை அந்தோனியார் ஆலய குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் அங்கு சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார்.

இதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல் ஆகும். சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் ஏ.எச்.எம்.பௌசி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சம்பவம் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்த ராஜபக்ச, பந்துல, மனோகணோசன், பிரசன்ன உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.