இலங்கையில் மற்றுமொரு குண்டு வெடிப்பு! மசூதி சேதம்…

முந்தல் பிரதேசசபைக்குட்பட்ட கொட்டந்தீவு பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தாக்குதல் கொட்டந்தீவு பகுதியில் உள்ள மசூதி ஒன்றிலேயே இந்த பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இரவு 10 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இந்த சம்பவத்தில் சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.