சற்று நேரத்தில் ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது பாதுகாப்புப் பேரவை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்புப் பேரவை இன்றைய தினம் கூட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம் முற்பகல் 9.00 மணியளவில் ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு பேரவை கூட உள்ளது.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள், நேற்றைய குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.

இந்த பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.