சினமன் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி? வெளியான தகவல்

கொழும்பில் பிரதான ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மூன்று ஹோட்டல்களில் நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி எவ்வாறு வெடிக்க செய்தார் என சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று காலை உணவு வேளையில் வரிசையின் நின்ற போதே, குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்துள்ளார்.

கோப்பையுடன் வந்த அந்த நபருக்கு உணவு பரிமாறப்படும் போதே அந்த நபர் வெடித்துச் சிதறியதாக குறிப்பிடப்படுகிறது.

துண்டுகளாக கிடந்த பயங்கரவாதியின் உடலலை பொலிஸார் அள்ளிச் சென்றதாக சினமன் ஹோட்டல் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக AFP ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக 34 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 9 வெளிநாட்டவர்களை காணவில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.