யாழின் முக்கிய பகுதிகள் அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டிற்குள்

இலங்கையில் நேற்றைய தினம் இடம்பெற்ற எட்டு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து யாழில் தற்போது உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அந்த வகையில் யாழ். மத்திய பேருந்து நிலையம் மற்றும் அப்பகுதியிலுள்ள அனைத்து பிரசித்தி பெற்ற இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் என்பவற்றை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், 400 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.