இல்லாமிய பயங்கரவாதிகளால் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது! அரசாங்கம் சற்று முன்னர் அறிவிப்பு

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொண்டதாக அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்களும் என்றும் அவர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.