யாழ்.பல்கலையில் சுடரேற்றி அஞ்சலி!

நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்அஞ்சலி நிகழ்வில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து உயிரிழந்தவர்களுக்கு தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதேவேளை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகங்களின் கல்வி சார் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகள் தொடர்ந்தும் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் ஊழியர்கள் அனைவரையும் நாளை 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்புமாறு துணைவேந்தர் அறிவுறுத்தி உள்ளார் என யாழ். பல்கலைக்கழகப் பதிவாளர் வீ. காண்டீபன் அறிவித்துள்ளார்.