புறக்கோட்டை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பதற்றம்! மற்றுமோர் பயங்கர நடவடிக்கையை முறியடித்த பொலிஸார்!

கொழும்பு புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் சற்று முன்னர் வெடிக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெடிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் (detonators) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது 87 குண்டுகளுக்கான சாதனங்களை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.