கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு! பீதியில் மக்கள்

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கட்டுநாயக்க சந்தியுடனான போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

இந்நிலையில் கட்டுநாயக்க சந்தியில் அமைந்துள்ள தபாலகத்திற்கு அருகில் உள்ள மின் கம்பதில் பொம்மைகளின் தலைகள் வைக்கப்பட்டுள்ளமையினால் அவற்றில் வெடிகுண்டுகள் உள்ளனவா என பரிசோதிப்பதற்காகவே குறித்த வீதி ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

குறித்த மின் கம்பத்தில் இரு பொம்மைகளின் தலைகள் காணப்படும் நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு குறித்த தலைகள் தொடர்பில் சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.