இலங்கை தற்கொலைப்படை தாக்குதலுக்கு தவாஹித் ஜமாத் என்ற அமைப்பே காரணம் – வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் நடந்த 6 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 6 தற்கொலையாளிகள் உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சங்ககிரி ஹோட்டலில் 609 மற்றும் 610ம் நம்பரில் ரூம் போட்டு தங்கிய நபர்களே சுமார் 25 கிலோ வெடிமருந்தை வைத்திருந்துள்ளார்கள்.

அதில் ஒருவரே அங்கே உள்ள உணவு விடுதியில் வைத்து தன்னை தானே வெடிக்க வைத்துள்ளார். குறித்த 5 நட்சத்திர ஹோட்டலில் அமெரிக்கர், மற்றும் பிரித்தானிய நபர் ஒருவர் என 2 வெளிநாட்டவர்கள் இறந்துள்ள நிலையில், இந்த தாக்குதலை நடத்தியது, “தவாஹித் ஜமாத்” என்னும் உள்ளூர் அமைப்பு தான் என்று பொலிஸார் கருதுவதாக கசிந்துள்ளது.

இவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி கிடைத்துள்ளதாகவும், இந்த அமைப்புக்கு சர்வதேச முஸ்லீம் பயங்கரவாதிகளோடு தொடர்பு இருந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மெகமெட் சஹரான் என்னும் நபர் உள்ளார். அவர் தலைமறைவாகியுள்ளார் என்றும் அறியப்படுகிறது.

கிறீஸ்தவ தேவாலயங்களை தாக்குவதே இவர்களது நோக்கமாக இருந்தாலும், ஏன் தெமடகொட மற்றும் தெகிவளை ஆகிய இடங்களில் இவர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்பது ஒரு குழப்பமான நிலையை தோற்றுவித்துள்ளது.

இவர்களில் பலர் இலங்கையில் நிலை கொண்டுள்ள நிலையில், சிலர் தம்மை பொலிஸார் தேடி கண்டு பிடித்துவிடுவார்கள் என்று நினைத்து, தம்மிடம் உள்ள வெடி பொருட்களை வெடிக்க வைத்து இறந்திருக்கலாம் என்று நம்ப்பப்படுகிறது.

எது எவ்வாறு இருப்பினும், இலங்கையில் உள்ள சில முஸ்லீம்களும் அரசியல் தலைவர்களும் இணைந்தே இந்த கொடூரக் கொலைகளை அரங்கேற்றியுள்ளார்கள். இதில் இவர்கள் சிங்கள தேவாலயங்களை ஏன் தாக்கவில்லை என்பது பெரும் சந்தேகங்களை கிளப்பும் விடையமாக உள்ளது.

சிங்களவர்களில் கை வைத்திருந்தால், அவர்கள் உடனே திருப்பி அடிக்க ஆரம்பித்திருப்பார்கள். முஸ்லீம்களை வெட்டி தள்ளி இருப்பார்கள். இதன் காரணத்தால் தான் தமிழர்களை இவர்கள் குறி வைத்தார்களா? என்ற சந்தேகங்களும் எழுகிறது அல்லவா? கொச்சிக் கடை தேவாலயம், டெகிவலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்கள் தமிழர்கள் அதிகம் வாழும் இடம். இங்கே இவர்கள் தாக்குதல் நடத்த என்ன காரணம்?

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பில் தேவாலயத்திற்கு வெளியே முதுகில் பெரிய பை ஒன்றுடன் நீண்ட நேரமாக ஒரு நபர் நின்று கொண்டு இருந்துள்ளார். ஏன் இங்கே நிற்கிறீர்கள் தேவாலயத்திற்கு செல்லலாமே என்று ஒருவர் கேட்டவேளை தனக்கு ஒரு டொலிபோன் கால் வரும் அதற்காக காத்து நிற்கிறேன். அதன் பின்னர் உள்ளே செல்வேன் என்று அவர் தமிழில் கூறியுள்ளார்.

பின்னர் குறித்த நபர் தேவாலயத்தை நோக்கி சென்றுள்ளார். அவர் வெளியே காத்து நின்றது டொலிபோன் அழைப்புக்காக அல்ல. நிறைய பேர் தேவாலயத்தினுள் சென்றபின்னர் செல்லவே. அப்படி என்றால் தான் நிறைய பேரைக் கொல்ல முடியும்.

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே தெய்வாதீனமாக அந்தக் குண்டு வெடித்துவிட்டது. இது தான் நடந்த உண்மை. எனவே உள்ளூர் முஸ்லீம்களே இதற்கு பொறுப்பு கூறவேண்டும்.