அதிரடி வேட்டையில் இதுவரை சிக்கிய 55 பேர்..! இருவர் தொடர்பில் வெளிவந்த செய்தி

கடந்த சில நாட்களாக இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரை 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பிரதானமான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) முன்னெடுக்கின்றது.

அந்த வகையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் 26 பேர் ஒப்படைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தம்புள்ளையில் வைத்து நேற்று இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் பிரதானமான சந்தேகநபர்கள் என பெலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரும், மாவனெல்லை பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.