இலங்கையில் தற்கொலை தாக்குதல் – தெய்வாதீனமாக உயிர் தப்பிய இந்திய பிரபலம்

இலங்கையில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே உயிர் தப்பியுள்ளார்.

விடுமுறையை கழிப்பதற்காக கும்ப்ளே இலங்கை வந்துள்ளார். கொழும்பில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட ஹோட்டல் ஒன்றிலேயே அவர் தங்கியிருந்துள்ளார்.

தான் உட்பட குழுவினர் குண்டுவெடிப்பு நடந்த ஹோட்டலிலேயே உணவருந்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கும்ள்ளே டுவிட்டர் செய்தியொன்றை பதிவிட்டுள்ளார். அதில் “அழகான இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் பிரார்த்தனை” செய்து கொள்வதாக அவர் குறிபிப்ட்டுள்ளார்.