பதவி விலக்கப்படவுள்ள பொலிஸ் மா அதிபர் !!

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர பதவி நீக்கப்படலாம் என அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் இடம்பெற்ற அண்மைய தாக்குதல்கள் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை நேற்றைய தினம் அமைச்சர் ராஜித செனரத்தவும், பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியும் நேற்றைய தினம் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரடம் பதவி விலகுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.