கொழும்பு ரயில் நிலையத்தில் காணப்பட்ட மர்ம பார்சல்..தீவிர சோதனையில் அதிகாரிகள்! பீதியில் மக்கள்

கொழும்பில் உள்ள முக்கிய ரயில் நிலையமான Kolpetty நிலையத்தில் பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

கொழும்பில் உள்ள Kollupitiya பகுதியில் உள்ள Kolpetty ரயில் நிலையத்தில் சற்றுமுன்னர் பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.அதை பார்த்ததும் மக்கள் அச்சத்தில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பார்சலில் இருந்த பொருளை சோதனை செய்தார்கள்.

அப்போது அந்த பார்சலில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் இல்லை என பொலிசார் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.