யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம வாகனம் – அதிரடி படையினர் தீவிர சோதனை

யாழ்ப்பாணத்தில் மர்ம வாகனம் ஒன்றினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் மர்மமான வாகனம் ஒன்று நிற்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடி படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் வாகனம் தொடர்பான முழுமையான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

கொழும்பில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளுடன் மர்ம வாகனம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் மர்ம வாகனம் நிற்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.