கிளிநொச்சியில் பயங்கர குண்டுகள்: விரைந்து சென்ற அதிரடிப்படை!

கிளிநொச்சி புளியம்பொக்கனை காட்டுப் பகுதியிலிருந்து ஒருதொகை மோட்டார் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக எமது கிளிநொச்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த பகுதியில் ஒருதொகை குண்டுகள் காணப்படுவதாக விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின்பிரகாரம் குறித்த பிரதேசத்திற்கு விரைந்த அவர்கள் குறித்த குண்டுகளை இன்று காலை மீட்டுள்ளனர்.

போர்க்காலத்தில் கைவிடப்பட்ட அல்லது மறைத்துவைக்கப்பட்ட மோட்டார் குண்டுகளாக இவை இருக்கலாம் என சந்தேகிக்கபடுகின்றது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.