நீர்கொழும்பு குண்டு வெடிப்பில் பலியான தாய், மகளின் இறுதிக்கிரியைகள்

நீர்கொழும்பு, கட்டுவபிட்டி பிரதேசத்திலுள்ள செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான தாய் மற்றும் மகளின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன.

அவுஸ்திரேலிய பிரஜைகளான இவர்கள் 17 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவின், மெல்பேர்ன பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவர்கள் இருவரும் ஈஸ்டர் தினமான நேற்று முன் தினம் ஆராதனைகளில் பங்கு கொள்வதற்காக கட்டுவபிட்டி செபஸ்னடியன் தேவாலயத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திலேயே தாயும், மகளான பத்து வயது சிறுமியும் பலியாகியுள்ள நிலையில் இன்று அவர்களது இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, மெல்பேர்னில் வைத்து பிறந்த தனது மகளுக்கு தற்போது 10 வயதே ஆவதுடன், அவள் பியானோ இசைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள் என இறந்துள்ள சிறுமியின் தந்தை கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

மேலும், இருவரினதும் சடலங்கள் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.