62500 ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்காவிற்கு..!

62500 ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்காவிற்கு..!

(எம்.சி.நஜிமுதீன்)

நல்லாட்சி அரசாங்கம் ஊவவெல்லசவிலுள்ள அறுபத்து இரண்டயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பை சீனி தொழில் துறைக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளது. அத்திட்டத்திற்கான அடிக்கல்லை எதிர்வரும் ஐந்தாம் திகதி நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும் அத்திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். அல்லாதுபோனால் அதற்கெதிராக பரந்துபட்ட போராட்டங்களை நடத்தவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் உதயஷாந்த தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்ததார்.