யாழ்ப்பாணத்தில் கனரக வாகனம் சகிதம் குவியும் படையினர்!

நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில் இத்தாவில் மற்றும் ஆனையிறவு பகுதி எங்கும் இன்று பிற்பகல் கனரக வாகனம் சகிதம் பெருமளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம் முழுவதுமாக முக்கிய இடங்களிற்கு ஆயிரக்கணக்காண இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு மாகணசபை அலுவலகத்தை பாதுகாப்பதில் இராணுவத்தினர் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

மேலும் நாவற்குழி, கைதடி போன்ற பிரதான பாலங்களிலும் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை ஆனையிறவில் இராணுவத்தின் மீண்டும் சோதனை நடவடிக்கையினை இன்று ஆரம்பித்துள்ளதுடன் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கும் பயணிகளின் பயணப்பொதிகளை சோதனையிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.