அடுத்த 24 மணிநேரத்தில் படைகளின் தலைமைத்துவத்தில் ஏற்படப்போகும்அதிரடி மாற்றம்!

நடந்து முடிந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , அடுத்த 24 மணி நேரத்துக்குள் பாதுகாப்பு தரப்பின் உயர்மட்ட பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்

புலனாய்வு அறிக்கைகளின் பிரகாரம் ஏன் முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது இப்போதைய முக்கிய கேள்வி .உண்மையில் எனக்கும் அது முன்வைக்கப்படவில்லை. எனக்கு தகவல் வந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருப்பேன்.

அவசரகால சட்டத்தால் மக்கள் மீது அடக்குமுறை ஏற்படுத்தப்படாது. நாட்டின் பாதுகாப்பை அது உறுதிப்படுத்தும் வகையில் இருக்கும்.பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாட்டில் நாம் இனி உறுதியுடன் செயற்படுவோம்.எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல.ஒரு சில குழுக்களே அடிப்படைவாதமாக இயங்குகின்றன என்றார் ஜனாதிபதி.