மர்ம பொதியால் கல்முனை நகரில் ஏற்பட்ட பதற்றம்!

கல்முனை பேருந்து நிலையத்தில் நேற்று சந்தேகத்திற்கிடமான மர்ம பொதியொன்று கிடந்ததையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரினால் அங்கிருந்த பேருந்துக்கள் அகற்றப்பட்டு பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.

விஷேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் சந்தேகத்திற்கிடமான பொதியை தூரத்திற்கு இழுத்துச் சென்று வெடிக்க வைக்க முயற்சித்தபோது அதில் வெடிகுண்டுகள் இருக்கவில்லையென தெரியவந்தது.

அப்பொதியில் வெற்று ஜூஸ் போத்தல்களே இருந்துள்ளது. அதனிடையே இன்னுமொரு சந்தேகத்திற்கிடமான பொதியையும் சோதனையிடப்பட்ட போது அதிலும் ஒன்றும் இருக்கவில்லை.

இதேவேளை, இச்சம்பவம் காரணமாக ஒரு மணி நேரம் பதற்ற நிலை நிலவியதுடன், அரச அலுவலகங்கள் வங்கிகள் என்பன இழுத்து மூடப்பட்டன.

பின்னர் நகர் வழமைக்கு திரும்பிய போதும் பொதுப் போக்குவரத்துச்சேவைகள் அலுவலக நடவடிக்கைகள் பெரிதாகஇடம்பெறவில்லை.