சந்தேகத்திற்கிடமான வேன் சிக்கியது

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் வரக்காபொலவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வேன் ரக வாகனம் ஒன்றும் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது.

புலனாய்வு அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வரக்காபொல காவல்துறை அதிகாரிகளும் இணைந்து கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அங்குருவெல்ல பகுதியில் வீடொன்று சோதனையிடப்பட்ட நிலையில், அங்கிருந்து நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அங்கிருந்து சந்தேகத்திற்கிடமான உந்துருளியொன்றும், தொலை தொடர்பு உபகரணங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.