தொடர் குண்டுவெடிப்பு தற்கொலை குண்டுதாரிகள் அனைவரும் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று படித்த நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்க இளைஞர்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் பட்டப்படிப்பை முடித்தவர் என்றும் இன்னொருவர் அவுஸ்ரேலியாவில் பட்டப்படிப்பை முடித்தவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.