இலங்கையில் பல்வேறு இடங்களில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் சிசிடிவி காட்சிகள் தர்ட்போது வெளியாகியுள்ளன.
அதில் செபாஸ்டின் தேவலாயத்துக்குள் பெரிய பை ஒன்றை மாட்டிக் கொண்டு தீவிரவாதி ஒருவர் பெண் குழந்தை ஒன்றின் கன்னத்தை தட்டிக் கொண்டே நுழைகிறார்.
மற்றொரு சிசிடிவி காட்சியில் ஓட்டல் ஒன்றில் இரண்டு தீவிரவாதிகள் லிப்ஃட்டில் செல்கின்றனர். இந்த இரண்டு சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன.
இந்நிலையில், இலங்கை தீவிவாதிகளால் வைக்கப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்யும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டு வருவதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
CCTV footage shows an alleged Sri Lankan suicide bomber entering St Sebastian's Church in Negombo moments before the blast #SriLankaBlasts pic.twitter.com/G37Wv7Dy2F
— In the NOW (@IntheNow_tweet) April 23, 2019
கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை யொட்டிநடைபெற்ற ஏராளமானகுண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 359 பேர் பலியாகி உள்ளனர். இதில்.500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிசையில் உள்ளனர்.