யாழில் முகவரியை தேடித்திரிந்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்! இப்படியுமா சந்தேகப்படுவது??

யாழ்ப்பாணத்தில் முகவரியை தேடித்திரிந்த இளைஞனை ஊரவர்கள் பிடித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

எனினும் குறித்த நபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதும் விடுவிக்கப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

“சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டு இருக்கைகளுக்கு றெக்சீன் சீலை அடிக்கும் வேலையை யாழ்ப்பாணம் நகரிலுள்ள கடை ஒன்றில் வழங்கியுள்ளார்.

அது தொடர்பில் அளவுகளை எடுக்க குறித்த இளைஞன் சுன்னாகத்துக்கு சென்றுள்ளார்.

வேலை வழங்கியவரின் வீட்டு முகவரி தெரியாமல் அந்த நபர் விசாரித்து அலைந்துள்ளார்.

அதனால் சந்தேகம் கொண்ட ஊரவர்கள் அந்த நபரைப் பிடித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அந்த நபர் ஐந்து சந்தியைச் சேர்ந்தவர். அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்படுவார்” என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவினர்.