யாழ் கோட்டைக்குள் பயங்கர வாதிகளா? தேடுதல் வேட்டையில் படை அணி!

யாழ்ப்பாணம் கோட்டையில் சுமார் 30 நிமிடங்கள் தேடுதல் முன்னெடுத்த படை அணிகள் அங்கிருந்து பின்வாங்கின.

கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு எவரும் இல்லை என உறுத்திப்படுத்தியே வெளியேறியதாக பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

“யாழ்ப்பாணம் கோட்டை வாயிலில் வாகனம் ஒன்றில்அழைத்துவரப்பட்ட மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இறக்கிவிடப்பட்டதாக புலனாய்வுத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அங்கு சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தேடுதல்நடத்தினர். எனினும் அங்கு எவரும் மறைந்திருப்பதாகத் தெரியவில்லை.

அதனால் சுமார் 30 நிமிட தேடுதலின் பின்னர் அதிரடிப்படையினரும் பொலிஸாரும் அங்கிருந்து வெளியேறினர். சந்தேகத்துக்கு இடமாக அங்கு எவரும் இருக்கவில்லை” என்று பொலிஸ் தரப்புகள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் கோட்டைக்கு இருமரங்கிலும் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையம் மற்றும் சிறப்புஅதிரடிப் படையினரின் முகாம் என்பன உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.