திருகோணமலையில் பரபரப்பு! வீடுகளுக்குள் முடங்கும் மக்கள்

திருகோணமலையில் திடீரென பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளதால் அனைத்து ஊழியர்களையும் வீடுகளுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வங்கிகள் உள்ளிட்ட அரச தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் வீடுகளை நோக்கி செல்கின்றனர்.

பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றுமாறும் அவ்வாறு அகற்றப்படாத வாகனங்களை சந்தேகத்தின் பேரில் பரிசோதிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைய அடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதனொரு கட்டமாக திருகோணமலையில் தீவிர சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.