மட்டக்களப்பில் நிலவிய பரபரப்பு; பயங்கரவாதியுடன் தொடர்புடைய சந்தேகியின் கடை சோதனை!

மட்டக்களப்பு நகரில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டதால் சற்று நேர பதற்றம் நிலவியதாக மட்டக்களப்புத் தகவல்கள் கூறுகின்றன.

மட்டக்களப்பு கொமர்ஸியல் வங்கிக்கு அருகிலுள்ள தொலைபேசிக் கடையினைச் சோதனையிடும் நோக்கிலேயே இந்த திடீர் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது.

கடந்த ஞாயிறன்று மட்டக்களப்பில் நடந்த பயங்கர குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதியுடன் சம்மந்தப்பட்டதாக தொலைபேசி கடை உர்மையாளரை பொலிஸார் கைதுசெய்தனர்.

இதனையடுத்து அவரது தொலைபேசிக் கடையில் வெடிபொருட்கள் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் அல்லது குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய தயடங்கள் காணப்படலாம் எனும் கோணத்தில் சோதனை நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும் சற்றுநேர பதற்றத்தின்பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பியதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.